Tuesday, July 17, 2007

இது
எத்தனாவது முறை?
எண்ணற்ற முறைகளாயிற்று
சூல் கொண்ட மனம் .........உவப்பேறும்
சூல் கொண்டதை சீராட்டவும் பாராட்டவும் என கனவுகள் விரியும்
ஒரு முறையும் உற்சாகத்திற்கு குறைவிராது
துள்ளும் களிப்புறும் பகிர மா...ட்டோமா என தவிக்கும்
எல்லாம் ஓரு சில இரவுகளில்
பகல் நேர இருட்டடிப்பில் காணாது கலைந்து விடும்
சோர்வுற்ற மனம்
தளராது வேதாளமாய் மறுபடி சூல் கொள்ளும்.

1 comment:

eniasang said...
This comment has been removed by the author.